Monday, 25 May 2020

வியக்கவைக்கும் 5 மர்ம கோவில்கள் பற்றி தெரியுமா?

1. தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில்
கி.பி 10 ஆம் நூற்றாண்டில் மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனால் தஞ்சையில் கட்டப்பட்டதுதான் பிரகதீஸ்வரர் கோவில். இக்கோவில் 216 அடி உயரம் கொண்டதாகும்.

இக்கோவிலை கட்ட சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் டன் கிரானைட் கற்களை பயன்படுத்தியுள்ளனர். 
என்றாலும், இக்கோவிலை சுற்றி 70 கிலோ மீட்டர் வரை கிரானைட் கற்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இக்கோவிலின் முதன்மை கோபுரத்தின் மீது அமைந்துள்ள கோபுர கவசமானது, 81,000 கிலோ எடையுள்ள ஒரே கல்லினால் ஆனது என்பது ஆச்சரியப்படத்தக்கதாகும். சுமார் 1000 வருடங்களுக்கு முன்பு எந்தவொரு தொழில் நுட்பமும் இல்லாத காலத்தில் வெறும் யானைகளை கொண்டு பிரமாண்ட எடையுள்ள கல்லை 216 அடி உயரத்தில் பொருத்தமுடிந்தது என்பது மர்மமாகவே காணப்படுகிறது.

2. பத்மநாபசுவாமி கோவில் – கேரளா
பத்மாசுவாமி கோவிலானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ளது.
இந்த பதமசுவாமி கோவில்தான் உலகிலேயே பணக்கார கோவிலாகும். இக்கோவிலை கட்டப்பட்ட வருடம் இன்றுவரை கேள்விக்குறியாகவே உள்ளது. 

இக்கோவிலில் எ,பி,சி,டி என பெயரிடப்பட்ட 8 பாதாள அறைகள் உள்ளன. அவற்றில் தற்போது 5 மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ‘எ’ என்ற பாதாள அறை திறக்கப்பட்ட போது தங்கம் மற்றும் வைர நகைகள், தங்கத்தால் ஆன யானை சிலைகள், வைர கழுத்தணிகள், அரியவகை கற்கள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதையல்களை வெளியே எடுப்பதற்கே 12 நாட்கள் தேவைப்பட்டது. இக்கோவிலில் உள்ள ‘பி’ எனும் ஏழாவது பாதாள அறை இன்று வரை திறக்கப்படாமல் உள்ளது. இவ்வறையின் கதவு முற்றிலும் இரும்பினாலும் மேல்புறம் இரண்டு நாகப்பாம்பின் சிலையுடனும் திறக்க முடியாதபடி பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. 
இவ்வறையில் என்ன உள்ளது என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

3. எல்லோரா கைலாசநாதர் கோவில்
கி.பி 8 ஆம் நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணன் மன்னரால் இந்த கைலாசநாதர் கோவில் கட்டப்பட்டது. இக்கோவிலை முழுவதுமாக கட்ட கிட்டத்தட்ட 4,00,000 டன் பாறையை, கோவிலின் மேலிருந்து கீழ் நோக்கி வெட்டி நீக்கியுள்ளனர். 

18 வருடங்களிலேயே இக்கோவில் கட்டி முடிக்கப்பட்டது. இது எந்தவிதமான நவீன தொழில்நுட்ப பயன்பாடும் இன்றி சுமார் 1200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்கள் மலைப்பாறைகளை வெட்டி, சாதாரண உளி மற்றும் சுத்தியல் கொண்டு வெறும் 18 வருடத்திலேயே இந்த கோவிலை உருவாக்கினார்கள் என்பதும் மர்மமாகவே உள்ளது.

4. கோனார்க் சூரிய கோவில்
இக்கோவிலானது கி.பி 1255 ஆம் ஆண்டு ஒரிசாவில் உள்ள கோனார்க் எனும் இடத்தில் கட்டப்பட்டது. இந்த சூரிய கோவிலானது 24 சக்கரங்கள் கொண்ட தேரினை, 7 குதிரைகள் இழுத்து செல்வது போன்ற அமைப்புடைய ஒரு அடித்தளத்தின் மீது மிகவும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள 24 சக்கரமும் 24 மணி நேரத்தையும், 7 குதிரைகள் வாரத்தில் உள்ள ஏழு நாட்களையும் குறிக்கிறது.

இந்த சக்கரத்தில் உள்ள ஆரங்களின் நிழல்களை கொண்டு தற்போதுள்ள நேரத்தினையும் துல்லியமாக கூற முடிகிறது. சக்கரத்தின் நிழல் இன்றய நேரத்தினை காட்டுவது மர்மமாகவே காணப்படுகிறது.
மேலும் இக்கோவிலின் ஒவ்வொரு இரு தூண்களும் ஒரு சிறிய இரும்பு தகட்டினால் இணைக்கப்பட்டுள்ளது ஆச்சரியபட தக்கதாக உள்ளது.

5. வீரபத்ரா கோவில்
கி.பி 1530ஆம் ஆண்டில் ஆந்திராவில் உள்ள அனந்தபூரில் கட்டப்பட்டுள்ள கோவில்தான் வீரபத்ரா கோவில். இந்த கோவிலில் சுமார் 70 மாபெரும் தூண்கள் உள்ளன. 
இந்த தூண்களில் ஒரு தூண் மட்டும் தரையை தொடாமல் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கும். இந்த தூணானது சுமார் 70 அடி உயரம் கொண்டது. அந்தரத்தில் தொங்கும் இந்த தூணை எந்த சக்தி தாங்கி பிடித்து கொண்டிருக்கிறது என்பது மர்மமாகவே காணப்படுகிறது.

1910 ஆம் ஆண்டில் ஆங்கிலேய பொறியாளர் ஒருவர் இம்மர்மத்தை மறைக்க நவீன தொழில்நுட்பத்துடன் இந்த தூணின் அடிப்பாகத்தை தரையுடன் இணைக்க முயற்சித்தார். பின்னர் அந்தரத்தில் தொங்கும் தூணின் ஒரு முனையை தரையு
 விட்டார். 
அப்பொழுது கோவிலின் மேல் தளமானது சேதமடைய தொடங்கியது. அதனால் அந்த ஆங்கிலேய பொறியாளர் இம்முயற்சியை பாதியிலேயே கைவிட்டுவிட்டார்.

மேலும் இக்கோவிலில் 3 அடி நீளம் கொண்ட கால் தடம் ஓன்று இருப்பதும் 
குறிப்பிடத்தக்கதாகும்...

நமது முன்னோர்கள் தமிழ் கலாச்சாரத்தையும் இந்து தர்மத்தையும் பாதுகாத்து உள்ளார்கள்.! 

No comments:

Post a Comment

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...