எந்த விஷயமாக இருந்தாலும் அதிர்ஷ்டம் இருக்க வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள். அது உண்மை தான். நாம் என்ன தான் முயற்சி செய்தாலும், அதிர்ஷ்டம் என்று ஒன்று இருந்தால் நமக்கு கிடைத்தே தீரும்.
நம்முடைய வாழ்க்கையில் நல்லதோ? கெட்டதோ? எது நடந்தாலும் நம் நினைவுக்கு வருது, காலையில் எதை பார்த்து விழித்தோம் என்பதுதான். எட்டு திசைகளுக்குமே ஒவ்வொரு யோகம் இருக்கின்றது. காலையில் எந்த திசையில் விழித்தால், என்ன யோகம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.....!!
கிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், ஆயுள் விருத்தி கிடைக்கும்.
தென்கிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், வெறுப்பு உண்டாகும்.
தெற்கு திசையைப் பார்த்து விழித்தால், மரண பயம் உண்டாகும்.
தென்மேற்கு திசையைப் பார்த்து விழித்தால், பாவங்கள் சேரும்.
மேற்கு திசையைப் பார்த்து விழித்தால், நல்ல விஷயங்கள் நடக்கும்.
வடமேற்கு திசையைப் பார்த்து விழித்தால், பருமன் அதிகமாகும்.
வடக்கு திசையைபார்த்து விழித்தால் அதிஷ்டம் அருளும் அன்றைய பொழுது வளமாகும் .
வடகிழக்கு திசையைப் பார்த்து விழித்தால், உடலிலும் - உள்ளத்திலும் சக்தி கிடைக்கும். சிந்தனைகள் தௌிவாக இருக்கும்.
இந்த மாதிரியான எளிய சாஸ்திரங்களை நம்பிக்கையுடன் கடைபிடித்தால், துன்பங்கள் எல்லாம் மறைந்து, இறைவனின் ஆசிர்வாதத்தால் நன்மைகள் நம்மை தேடி வரும்.
இனி உங்களுக்கு எந்த அதிர்ஷ்டம் வேண்டுமோ, அந்த திசையை நோக்கி விழித்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment