Wednesday, 27 May 2020

கடன் பிரச்சனையில் இருந்து விடுபட எளிய பரிகாரம்

குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இந்த பரிகாரத்தை செய்தால் போதும்*

ஒரு செம்பு நிறைய பசும்பால் எடுத்து அதில் சிறிது மஞ்சள் கலந்து பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை அதில் போட்டு கிழக்கு நோக்கி அமர்ந்து பால் செம்பில் வலது ஆட்காட்டி விரலால் எனக்கு ருண  விமோசனம் கிடைக்க வேண்டும் என்று பாலில் எழூதி 

பின்பு கிழ்கண்ட மந்திரத்தை 108முறை கூறி பின்பு அந்த பாலை அரசனும் வேம்பும் ஒன்றாக வளர்ந்த மரத்திற்கு ஊற்றி சந்தன பத்தி ஏற்றி வழி பட்டுவர விரைவில் கடன் அடைபடும் வழி கிடைக்கும்

பாலை ஊற்றியபிறகு பதினோரு ஒரு ரூபாய் நாணயங்களை வீட்டிற்க்கு கொண்டு வந்து அடுத்த முறை அந்த நாணயங்களை பயன் படுத்தவும்
பாலின் அளவு உங்கள் வசதியை பொருத்தது
இந்த பரிகாரத்தை எந்த கிழமையிலும் செய்யலாம்
காலையில் செய்வது சிறப்பு

வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்யவும்

இரண்டும் இணைந்த மரம் கிடைக்கவில்லை என்றால்
கடக ராசிகாரர்கள் அரச மரத்திற்க்கும்
மீன ராசிகாரர்கள் வேப்ப மரத்திற்க்கும் இந்த பாலை ஊற்றலாம்
மற்ற ராசிகாரர்கள் இரண்டும் இணைந்த மரத்திற்க்கு ஊற்ற வேண்டும்

மந்திரம்

ஓம் வசி ஜெகவசி தனவசி ருண  நசிநசி ஸ்வாகா.

No comments:

Post a Comment

மகாபாரதத்தின் முக்கிய கதாபாத்திரங்கள்

  மகாபாரதம் ஏராளமான கதாபாத்திரங்களைக் கொண்ட ஒரு காவியம் . சில முக்கிய கதாபாத்திரங்கள் இங்கே :   கிருஷ்ணா - பாண்டவ இளவரசர் அர்...